கோவை வேளாண் பல்கலைக்கழக செயல்பாடுகளை கண்காணித்திட பி ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
வேளாண் உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்ய 10 ஆயிரம் கோடியில் தேவையான நிதியை தமிழகம் பெற வேண்டும். கோவை வேளாண் பல்கலைக்கழக செயல்பாடுகளை கண்காணித்திட பி ஆர்.பாண்டியன் வேண்டுகோள். தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் இயக்குனர் பொறுப்பு லோகநாதன், பேராசிரியர் மீனாட்சி உள்ளிட்டோர் நிறுவனத்தின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து அதனை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகள் லாபம் பெறும் தொழிலாக மாற்றும் செய்ய மத்திய அரசு ரூபாய் 10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதி மூலம் உற்பத்தியாளர் குழுக்களை சிறு குறுந் தொழில் நிறுவனங்களாக மாற்றம் செய்து அதன் அடிப்படை கட்டம...