Posts

Showing posts from September, 2024

இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை காசோலைகள் வழங்கும் விழா..!

Image
 தருமபுரியில் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம்- தகடூர் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை (காசோலைகள்) வழங்கும் விழா நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் துரைராஜ்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி பாலசுப்பிரமணியம் , தலைவர் பாராலிம்பிக் சங்கம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செண்பகவல்லி தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கல்பனா சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினர். கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது , கோவிந்த், ரமேஷ், மாணிக்கம், குமரவேல், மகாலட்சுமி ரமேஷ், செந்தில் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்...

இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்..!

Image
 தருமபுரி அடுத்த பைசு அள்ளியில் அமைந்துள்ள விஜய் சூப்பர்  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சர் சென்டர் சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் விஜய முருகன், விஜயகுமார், ஆனந்த், சுபாஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.  இம்முகாமில் பல்வேறு மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு, புற்றுநோய், கல்லீரல் , டயாலிஸ், சிறுநீரகம், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை ஆகிய மருத்துவ பரிசோதனைகள் செய்து பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் மருத்துவக் குழுவினர்களால் வழங்கப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் 700 பேர் கலந்து கொண்டனர். புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்கள் 242 பேர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருந்து,மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இம் முகாமிற்கான ஏற்பாட்டை மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கல்லூரியின் 12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் 17-வது ஆண்டு துவக்க விழா..!

Image
 தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் 12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பென்னாகரம்  சட்டமன்ற உறுப்பினர் மணி ,  தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், மூத்த சிவில் நீதிபதி( ஓய்வு) ராஜாராம், மாவட்ட மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி , மாவட்டச் செயலாளர் அண்ணா தொழிற்சங்கம் பழனிசாமி , அறுவை சிகிச்சை நிபுணர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆசிரியர் சௌந்தரபாண்டியன் இவ்விழாவின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி உரையாற்றினார். இதில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் திரளாக பங்கேற்றனர். இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து வைத்த எம் எல் ஏ..!

Image
 தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கப்பட்டது. அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சுகந்திபிரியா, பொறுப்பு ஜெயந்தி, குழந்தைகள் வளர்ச்சி தொகுதி மேற்பார்வையாளர் தமிழ்மணி, பாமக மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் யுவராஜ், ஒன்றிய அமைப்பு செயலாளர் திருமூர்த்தி, முன்னாள் வார்டு உறுப்பினர் ரவி, நிர்வாகிகள் காமராஜ், பெருமாள், மனோகரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீடிப்பு..!

Image
 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக். 2ஆம் தேதியுடன் நிறைவு பெற்று, அக். 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அக். 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், காலாண்டு விடுமுறை முடிந்து அக்.7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலாண்டுத் தோ்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவா்களின் விடைத்தாள்களை ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றை சரிபாா்த்து எமிஸ் இணையத்தில் மாணவா்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தோ்ச்சி சதவீதத் தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பா். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவா்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க வேண்ட...

நேரு யுவகேந்திரா சார்பில் மை பார்த் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி முகாம்..!

Image
தருமபுரி மாவட்டம் நேரு யுவ கேந்திரா சார்பில் மை பார்த் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிமுகாம் (Swachhata Hi Seva 2024 நிகழ்ச்சியானது கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் மூலம் ஜெய் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனிராஜ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முருகேசன் ஊராட்சி மன்ற  துணைத்தலைவர் கலந்து கொண்டு தூய்மையே சேவை பணி முகாம் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார். முன்னதாக தூய்மையே சேவை பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மையே சேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் JSV கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் காந்தி, நித்யா, ரவி, ஜெயலஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பாப்பிநாயக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள பொது இடங்களில் தூய்மைப்பணி மேற்க்கொள்ளப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை ம...

தருமபுரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்..!

Image
 தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடையடைப்பு போராட்டம் வரும் 4-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி பென்னாகரம்  சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின்  அறிவுறுத்தலின்படி இந்த போராட்டம் நடைபெறுகிறது.மேற்கில் காவிரியும், வடக்கில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாமல் தருமபுரி மாவட்டம் பாலைவனமாக காட்சியளிக்கிறது.  தருமபுரி மாவட்டத்தை சோலைவனமாக மாற்ற தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் ஏரி, குளம், நீர்நிலைகளில் உபரி நீரை நிரப்பினால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 அணைகள்,83 ஏரிகள், 763 சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1230 நீர்...

பேரறிஞர் அண்ணாவின் 116- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்..!

Image
 தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 116- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தருமபுரி நகர கழகசெயலாளர் பூ கடை ரவி தலைமை தாங்கினார்.  ஒன்றிய கழகச் செயலாளர் நல்லம்பள்ளி கிழக்கு சிவபிரகாசம் வரவேற்புரை ஆற்றினார். தருமபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நீலாபுரம் செல்வம் , அசோகன், நகர அவைத் தலைவர் வடிவேல், நகர துணை செயலாளர் அறிவாளி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்ட கழக செயலாளர் அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் காவேரி, கழக அமைப்புச் செயலாளர் சிங்காரம்,  கழக விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து...

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ..!

Image
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் அந்தந்த பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வுகளில், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா, இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இலளிகம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்கநாதன், பாமக மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள், முருகன், புனிதாபழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், நிர்வாகிகள் செந்தில், மாது, ஜெயக்குமார், வடிவேல், தாமரை, தங்கதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்....

புதியதாக அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்..!

Image
தருமபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி, உங்கரானஹள்ளி ஊராட்சிகளில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 10000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லவும், வேலைக்கு செல்பவர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குட்டக்கரை பகுதியில் பேருந்துக்காக செல்ல வேண்டும். மேலும் இரவு நேரங்களில் பணி முடிந்தும், சிறப்பு வகுப்பு முடிந்து வரும் பெண்கள் தனியாக வரும் சூழல் இருந்து வருகிறது.  இந்த நிலையில் குட்டக்கரை பகுதியில் அரசு புதிதாக அரசு மதுபானக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால், பெண்களுக்கும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே மதுபான கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அடிப்படை வச...

உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி..!

Image
 தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி, தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  தருமபுரி மேற்கு மாவட்ட  செயலாளர் வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். தருமபுரி  மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பசுமைதாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது உயிர் இழந்த தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது 21 பேர் தங்களது உயிர்களை இழந்து 108 சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தனர் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது செந்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பாரி மோகன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், பாடி செல்வராஜ், சாந்தமூர்த்தி, பெரியசாமி மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம், பசுமை தாயகம் மாது, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தியாக...

புலிகரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா..!

Image
 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புலிகரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு பாலக்கோடு தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஒன்றிய தலைவர் கோபி தலைமை தாங்கினார்.  தம்பிதுரை, பூவரசன், ராஜ்குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக பாஸ்கர் மாவட்ட தலைவர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கீழ்கண்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்கள். முதல் பரிசு ஐஸ்வரியம் முருகன், இரண்டாம் பரிசு மாவட்ட பொதுச் செயலாளர் சிவசக்தி, மூன்றாம் பரிசு மாவட்ட துணைத் தலைவர் அல்ராஜ், நான்காம் பரிசு பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம்,  ஐந்தாம் பரிசு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பாலக்கோடு சிவா ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினார்கள். நன்றி உரை தம்பிதுரை விவசாயி அணி தலைவர், பாலக்கோடு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாரதிய மஸ்தூர் சங்கம் தொழிற்சங்க கொடியேற்றும் விழா..!

Image
 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு விஸ்வாகர்மா ஜெயந்தி விழா மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி யின் 74 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது.  இதற்கு தருமபுரி மண்டல செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பாலக்கோடு கிளைச் செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மண்டல கௌரவ தலைவர் சண்முகம், தருமபுரி மண்டல தலைவர் சேட்டு, தருமபுரி மண்டல பொருளாளர் பழனிச்சாமி ,தருமபுரி மண்டல துணைச் செயலாளர் செந்தில்குமார், பாலக்கோடு கிளை பொருளாளர் தங்கவேல், பாலக்கோடு கிளை அமைப்பு செயலாளர் வெங்கடாசலபதி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாலக்கோடு கிளைத்தலைவர் மாதையன் நன்றி உரையாற்றினார்.

த்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஊர்வலம்..!

Image
 தருமபுரியில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஊர்வலம்..! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு தருமபுரியில் இரங்கல் கூட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு , சிசுபாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், திமுக நகரசெயலாளர் நாட்டான் மாது, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமைஜெயராமன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பாண்டியன், சாக்கன் சர்மா , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகி சுப்பிரமணி, இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுபேதார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ்...

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்..!

Image
தருமபுரி கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் 72-வது பிறந்தநாள் விழா மற்றும் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பி. குமார் தலைமை தாங்கினார். தருமபுரி நகர செயலாளர் ஜெயம் சுரேஷ் வரவேற்று பேசினார்.  மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய்வெங்கடேஷ், மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமலிங்கம், தலைமை கழக பேச்சாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவையொட்டி ஏழைப் பெண்களுக்கு புடவைகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றியம் வாரியாக நிர்வாகிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் பெரியசாமி, தங்கதுரை, பொன்மொழி, ஒன்றிய ...

3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்..!

Image
முத்துப்பேட்டையில்  3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன்  விநாயகர் ஊர்வலம் கோலாகலம்  இரண்டாயித்திற்கும் மேற்பட்டோர் பங்கே பங்கேற்பு..!  நாடு முழுவதும் கடந்த 7- ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  இதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு  நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பில் 32 ம் ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் இன்று நடைபெற்று வருகிறது இவ்ஊர்வலத்தையொட்டி முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 6  நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.  இதன் நிறைவாக இன்று முத்துப்பேட்டை ஜாம்பவான்னோடை பகுதியில் உள்ள சிவன் கோவிலில் 19 க்கும் மேற்பட்ட  அனைத்து விநாயகர் சிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வ...

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா..!

Image
பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். இயக்குனர் மோகனசுந்தரம் பொறுப்பு தலைமை உரை நிகழ்த்தினார். தலைவர் NHRD Housur Chapter  புவனேஷ் குமார் மற்றும் ராஜேஷ் குமார்,துணை மேலாளர் யுனோ மிண்டா குழுமம் சிறப்பு சொற்பொழிவு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர். இறுதியாக முகமத் நாபி நன்றியுரை வழங்கினார் .நிகழ்வை இரண்டாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

தருமபுரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்..!

Image
 தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின்  சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில்  நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது வரவேற்புரை ஆற்றினர்.  மேலும் செல்வராஜ் மாவட்டஅவைத் தலைவர், தங்கமணி மாவட்ட கழகப் பொருளாளர், லட்சுமி நாட்டான் மாது நகர மன்ற தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இன்ப சேகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இல்லம் தேடி இளைஞரணி சேர்த்தல் கழக ஆக்கப்பணிகள் குறித்து மாவட்ட கழக செயலாளர் பேசினார். இக்கூட்டத்தில் அன்பழகன், மாநில மாவட்ட நகர பேரூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரியில் நடந்த அதிர்ச்சி ; தன் உயிரை பணயம் வைத்து தன் மகன் உயிரை காப்பாற்றிய தாய்..!

Image
தருமபுரியில் நடந்த அதிர்ச்சி ; தன் உயிரை பணயம் வைத்து தன் மகன் உயிரை காப்பாற்றிய தாய்..! தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அடுத்த கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் அந்தோணி, அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன் ஆல்வின் ஆண்டோ டேனியல் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல்நிலை மிக மோசமான நிலையில் பெங்களூரில் உள்ள நாராயணா ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால்  இரண்டு பேருக்கும்  ஒரே மாதிரியான பிளட் குரூப் உள்ளவர்களின் கல்லீரல் மட்டுமே தான் வேண்டும் என கூறியதால் சிறுவனின் தாயாரது  பிளட் குரூப் ஒரே மாதிரி இருப்பதால் தன் மகனுக்கு நானே கல்லீரல் தானம் செய்வதாக தெரிவித்தார். பின்னர் மருத்துவ குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றினார்கள்.இது குறித்து சிறுவனின் தந்தை மற்றும் மருத்துவ குழுவினர் கூறியதாவது; மரபணு நோயால் கல்லீரல் மு...

பாமக எம்.பி சந்தித்து மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்..!

Image
 தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகைத் தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களை சந்தித்து மாற்றுக் கட்சியினர் பாமகவில் இணைந்தனர்.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சியை சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக அயலக அணி மாவட்டத் தலைவர் பாரதி தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், மாவட்ட துணை தலைவர் நந்திசிவம், ஒன்றிய செயலாளர் குமரன், ஒன்றிய தலைவர் ஜிம்பாலன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

முன்னாள் மாணவர்களின் விரிவுரை தொடர் வகுப்பு..!

Image
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக முன்னாள் மாணவர்களின் விரிவுரை தொடர் வகுப்பு "பொருள் அறிவியலில் நானோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் துறைத் தலைவர் செல்வபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரை நிகழ்த்தினார்.  முன்னாள் மாணவர் மணிகண்டன், உதவி பேராசிரியர், இயற்பியல் துறை ராமகிருஷ்ணா கல்லூரி திருச்சிராப்பள்ளி  சிறப்பு வகுப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக பிரசாத், உதவி பேராசிரியர், இயற்பியல் துறை நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வை கோபால் கிருஷ்ணன், செந்தில் மற்றும்  இயற்பியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

விநாயகர் சிலையை உற்சாகத்துடன் நீர் நிலைகளில் கரைத்து மகிழ்ந்த பொதுமக்கள்..!

Image
 விநாயகர் சிலையை உற்சாகத்துடன் நீர் நிலைகளில் கரைத்து மகிழ்ந்த பொதுமக்கள்..! நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மூன்று நாட்கள் பொதுமக்கள் சிறப்பாக வழிபட்டு வந்தனர். இதையடுத்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில் விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைப்பதற்காக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏராளமான விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் விநாயகர் சிலையை பொதுமக்கள் ஒகேனக்கல் காவேரி ஆறு, தென்பெண்ணை ஆறு, கே ஆர் பி அணை என பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்காக மினி டெம்போ, லாரிகள், ஆட்டோக்கள் மூலம் மேல தாளங்களுடன் உற்சாகத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு அந்த அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள திப்பம்பட்டி கூட்டு ரோடு அருகே இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலையை ஏற்றி கொண்டு வரும் வாகனங்களை காவல்துறையினர் பரிசோதனை செய்து பிறகு சிலையை கரைக்...

சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசாரின் பரபரப்பான சி.சி.டி.வி. காட்சி..!

 காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் துரத்தி செய்து பிடித்த போலீசாரின் பரபரப்பான சி.சி.டி.வி. காட்சி..!  தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை  கடத்தி செல்வதாக எஸ்.பி மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில்,நேற்றிரவு  காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் போலீசார் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் மின்னல்  வேகத்தில் பறந்தனர். காரை துரத்தி சென்ற போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று அகரம் பிரிவு சாலையில் சினிமா பாணியில் காரை மடக்கி பிடித்தனர்.காரை நிறுத்திவிட்டு  டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகினார். போலீசார் காரை சோதனை செய்ததில்  கர்நாடகாவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1 டன்  குட்கா மற்றும் பான் மசாலா  பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. அதனை...