Posts

Showing posts from February, 2025

பஞ்சப்பள்ளி அருகே சூடனூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடட்டம்..!

Image
 சூடனூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடட்டம்..! தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா ஊர்க்கவுண்டர் முருகன் தலைமையில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்த விழா நேற்று 15-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை  கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து  திருக்குட நன்னீராட்டு  தீபாரதனை காட்டினார். பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து  ஸ்ரீ சக்தி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து  மகா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் ஸ்ரீ சக்தி விநாயகர் சி...

தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்..!

Image
 தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் தருமபுரி நகரம், 18 மற்றும் 19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக செயலாளர் அன்பழகன் திண்ணை பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.சிங்காரம் கழக அமைப்புச் செயலாளர், முல்லைவேந்தன் கழக அமைப்புச் செயலாளர், கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர், சம்பத்குமார் அரூர் சட்டமன்ற உறுப்பினர், அன்பழகன் கழக விவசாய அணி தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். பொதுமக்களிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக் கூறி துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள். ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக...

பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்..!

Image
 பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்..! தருமபுரி அடுத்து பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து "மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்" என்ற தலைப்பில்  நடைபெற்றது. இதற்கு முன்னதாக முனைவர் செல்வா பாண்டியன் இயற்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினராக முனைவர் குணசேகரன் அவர்கள் கூறுகையில் கொடுக்கப்பட்ட UJT ஐப் பயன்படுத்தி தளர்வு ஆஸிலேட்டரை வடிவமைத்தல் என்ற தலைப்பில் சிறுபுரையாற்றினார் முனைவர் வெங்கட்ராம ரெட்டி பேராசிரியர் அவர்கள் கொடுக்கப்பட்ட செயல்பாட்டு பெருக்கியைப் பயன்படுத்தி ஒரு மான்ஸ்டபிள் மல்டிவைபிரேட்டரை வடிவமைத்தல்             என்ற தலைப்பில் விளக்...

கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் மாபெரும் கருத்தரங்கம்..!

Image
கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் மாபெரும் கருத்தரங்கம்..! தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் மாபெரும் கருத்தரங்கம் தருமபுரி அதியமான் கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பனிப்பதிவேடு உள்ள 40 ஆண்டு காலம் பணிபுரிந்த டேங்க் ஆபரேட்டர்கள், கிராம ஊராட்சியில் ரூபாய் 250 ஊழியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு பணி வரன் முறை வேண்டும், 10 ஆண்டு பணிமுடித்த தூய்மை பணியாளர்களுக்கு காலை முறை ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டு பணி முடிந்த தூய்மை பணியாள ர்களுக்கு சிறப்பு காலமுறை மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் 10,000 வழங்க வேண்டும், மாபெரும் கருத்தரகம் தருமபுரி அதியமான் கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கிருஷ்ணன்,...

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம்..!

Image
 ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம்..! தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவையொட்டி இன்று சாமிக்கு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள், வான வேடிக்கை, குதிரை ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கேரளா மேளம், காளை மாடு, பசுமாடு, ஒட்டகம், சாமி உருவ பொம்மைகள் ஆகியவையுடன் பால்குடம் ,முளைப்பாரி சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்துச் சென்றனர். இவ்விழாவினை கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

கல்லூரியில் அணுக்கரு மற்றும் படிக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம்..!

Image
 தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் அணுக்கரு மற்றும் படிக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் துறை சார்பாக வாழ்வியல் பயன்பாட்டில் அணுக்கரு மற்றும் படிக வளர்ச்சி என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்களுக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை முனைவர் ராபர்ட் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கே ஆனந்த், துணை முதல்வர்கள் அருட்தந்தை தாமஸ் சார்ஜ், அருட்தந்தை கிறிஸ்தவ அலெக்சாண்டர், பொருளாளர் அருட்தந்தை அமலவானன் ஆகிய முன்னிலை வகித்தனர்.  இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜி.ஐயப்பன், சிலி நாட்டின் சண்டிகோ நகரில் இயங்கி வரும் அடல்போ இபான்ஸ் பல்கலைக்கழக பட்ட ஆய்வாளர் முனைவர் சிவராஜ் துரைராஜ் மற்றும் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மைய இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் எம்.பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு நிஜ வாழ்வில் அணுக்கரு இயக்கம் படிக வளர்ச்சியின் தத்துவ வார்த்தை அம்சங்கள் நானோ படிகங்கள் சூரிய...