தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் உயிர் இழப்பு
தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியில் குடியிருந்த வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு வீட்டு உபயோகப் பொருட்களை மூன்றாவது மாடியில் இருந்து கீழே இறக்கும்பொழுது மின்சாரம் கம்பி மீது உரசியதால் இலியாஸ் பாஷா, கோபி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர்.
பச்சையப்பன் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தருமபுரி சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Comments
Post a Comment