முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா..!

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். இயக்குனர் மோகனசுந்தரம் பொறுப்பு தலைமை உரை நிகழ்த்தினார். தலைவர் NHRD Housur Chapter  புவனேஷ் குமார் மற்றும் ராஜேஷ் குமார்,துணை மேலாளர் யுனோ மிண்டா குழுமம் சிறப்பு சொற்பொழிவு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர். இறுதியாக முகமத் நாபி நன்றியுரை வழங்கினார் .நிகழ்வை இரண்டாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!