Posts

Showing posts from October, 2025

தருமபுரியில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா..!

Image
 தருமபுரியில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா..! தருமபுரி கடைவீதி, குமாரசாமிபேட்டை, அன்னசாகரம் ஆகிய பகுதியில் உள்ள முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து தருமபுரி கடை வீதியில் உள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருத வானேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 22- ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான (27/10/2025) திங்கட்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூர பத்மநாபன் புறப்பாடு நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை முருகப்பெருமாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகர பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை (28/10/2025) காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது . இதை தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் ம...

தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

Image
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக மாநிலம் தழுவிய மற்றும் மாவட்ட அளவிலான ஒரு நாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.  மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் ரூபாய் 15,000 வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊராட்சி மூலம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்க ...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உண்மையான ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டம்..!

Image
 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உண்மையான ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மோசடியாக பணி நிரந்தரம் செய்ததை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போராட்ட குழுவினர்கள் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி குழுவின் பரிந்துரையின்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் மோசடியாக பணி நிரந்தரம் செய்ததனால் பாதிக்கப்பட்ட உண்மையான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை போராட்டக் குழுவினர் நடத்தினர். உண்ணாவிரத போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.  போராட்டத்தில் காலி கமிஷன் காலத்தில் உண்மையாக உழைத்த ஒப்பந்த தொழிலாளர்களை உரிய கள விசாரணை செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வாரிய பணி வழங்க வேண்டும், மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை விசாரணை செய்து அடையாளம் கண்டு அவர்களுக்கு வாரியம் வழங்கிய பணப்பலன்களை திரும்ப பெற்று வாரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த...

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

Image
 பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..! தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளம் பட்டி சாலையில் உள்ள மந்தைவெளி மைதானத்தில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி பள்ளி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழுது அடைந்ததால் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது அங்கன்வாடி மையத்தின் பிரிந்த நிலையில் உள்ள கட்டிடம் அருகே பாலக்கோடு பேரூராட்சி மூலம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தற்போது முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடம் புதிதாக கட்ட முடியாத நிலையில் அதனை ஆக்கிரமித்தும் கட்டுகிறார்கள். ஆகையால் உடனே இந்த பணிகளை நிறுத்தி பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து அங்கன்வாடி மற்றும் சுற்றிலும் பூங்கா அமைத்து அங்கன்வாடி பள்ளி அங்கேயே நடைபெற நடவடிக்கை எடுப்பதுடன் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என  பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசின் நல திட்ட பிரிவின் மாவட்ட துணை தலைவர் சிவா, நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு நகர தலைவர் சேகர், நகர பொறுப்பாளர் ...