ஏப்ரல் 1-ந் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி..!

 ஏப்ரல் 1-ந் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 1-ந் தேதி முதல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான தரிசன டிக்கெட், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் கடந்த 20-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.


இந்த நிலையில் திருமலையில் உள்ள சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும், இதற்காக ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.


அதேபோன்று வருகிற 1-ந் தேதி முதல் பி.ஏ.சி-1-ல் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!