தருமபுரியில் உணவு பாதுகாப்பு துறை இரண்டு கடைகளுக்கு சீல்..!

தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணாபுரம், எட்டி மரத்துப்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது இரண்டு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் குமணன் ஒரு கடைக்கு ரூ.25,000 என இரண்டு கடைகளுக்கும் ரூ.50,000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள  கடைகளுக்கு குட்கா, புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது என அறிவுறுத்தினார்.




Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!