ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டியில் சேவாலயா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற நிலையில் வாழும் முதியோர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இலவச வேட்டி, சட்டை, புடவை மற்றும் இனிப்புகள் போன்றவற்றை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதில் சேவாலயா நிர்வாகிகள், உதவும் உள்ளம் அறக்கட்டளை நிர்வாகிகள், பாமக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வ மாளிகை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Comments
Post a Comment