தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்..!

 தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்..!


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில்நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்றார். தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், கண்ணபெருமாள், பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், ஆனந்தன்  உட்பட பலர்  முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு SiR திருத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கி பேசினார். 


இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசும்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியும் வெற்றி பெற செய்ய வேண்டும், இதில் குறிப்பாக பாலக்கோடு தொகுதி தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக  தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அதை முறியடித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்கு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பாடப்பட வேண்டும் என்று  பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சேர்மன் முரளி, சீனிவாசன், அரசு வழக்கறிஞர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்  இளைஞர் அணி மகேஷ் குமார்,  விவசாய அணி குமார், நிர்வாகிகள் தங்கதுரை, செந்தில்குமார், குட்டி, தமிழரசன், கிருஷ்ணன், சுரேஷ் ஐ டி விங்  பரணி சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!