காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகன பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகன பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது வழக்கு நிலுவையில் உள்ளபோதே கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அணையை கட்ட மும்முரம் காட்டி வருகிறது இதனை கண்டிக்கும் வகையில் இன்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஒன்று திரண்டு தர்மபுரி மாவட்டத்தில் ஒன்று கூடி கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட உறுதுணையாக உள்ள மத்திய அரசை கண்டித்தும் பென்னாகரம் அடுத்து மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகனப் பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரத்தை அடியோடு அழிக்கு...