மாவட்ட ஆட்சியர் சான்றிதழ், 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை..!

 தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம் தொடங்கப்பட்டது.



இத்திட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம், இளநிலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைத்து, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஒரே அரசு கலைக்கல்லூரி என்ற பெருமையினைப் பெற்றுத் தந்துள்ளனர். கல்லூரிக்கு பெருமை சேர்த்திட்ட மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் முனைவர் ஜா.பாக்கியமணி, முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பென்னாகரம், முனைவர் கோ.வெங்கடாசலம் உதவி பேராசிரியர், வணிகவியல் துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!