Posts

Showing posts from December, 2024

தருமபுரியில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க கால்கோள் பூஜை..!

Image
 தருமபுரியில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, கால்கோள் பூஜை செய்து பணிகள் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மூன்றாம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி நடத்துவதற்கு தடங்கம் மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் கால்கோள் நடும்  பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வதற்கு, இணைய வழியில் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்தனர். இந்த கால்கோள் பூஜையில் ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம்..!

Image
 பொ.மல்லாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம்..! தருமபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் டிசம்பர்  26 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் SIDP 2.0 ன் படி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவர்கள் கார்த்திக், சஞ்சய் குமார் ,ராகவன், சுஜித் குமார் ஆகியோரின் கண்டுபிடிப்பு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தமைக்கான பரிசுத்தொகை  ரூபாய் 10 ஆயிரம் காசோலையை தருமபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய ஜோதி சந்திரா வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது அப்பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் தமிழ் தென்றல் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வை மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் கௌதம் சண்முகம்  சிறப்பாக வழி நடத்தினார்.

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் சிறப்பு சொற்பொழிவு..!

Image
 பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் சிறப்பு சொற்பொழிவு..!  தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு 'கலாச்சார ஆய்வுகள் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு இலக்கியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து இன்றைய கால சூழலில் பட்ட ஆராய்ச்சிக்கு இக்கலாச்சார படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக இந்நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவர் கோவிந்தராஜ் விழா துவக்க உரை ஆற்றினார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான கிருத்திகா நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீதா நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வை இரண்டாம் ஆண்ட...

கொங்கநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

Image
 அரூரில் கொங்கநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது  தருமபுரி கிழக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் கலந்து கொண்டு பேசுகையில் தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கிராமங்களில் பூத் கமிட்டி அமைப்பது கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன், மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், ஐடிவிங் கோகுல், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் முகிலன், ஒன்றிய தலைவர் இளையராஜா, நகர தலைவர் அசோகன் மற்றும் ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

பென்னாகரம் பேரூராட்சி போடூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..!

Image
பென்னாகரம் பேரூராட்சி போடூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா! தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி போடூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன்,தண்டு மாரியம்மன்,கரக கோவில் அம்மன்,முனியப்பன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பென்னாகரம் அருகே போடூர் பகுதியில் 40 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன்,தண்டு மாரியம்மன் கரக கோவில் அம்மன் முனியப்பன் கோவில்கள் உள்ளன.இந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து புதிதாக கோவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.அந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வான முகூர்த்தங்கால் நடுதல் திங்கள் கிழமை தொடங்கி முளைப்பாரி இடுதல் கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலை விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த தீர்க்க கூட ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த குடத்தினை எடுத்து பேருந்து நிலையம்,கடைவீதி,காவல் நிலையம் போடூர் நான்கு சாலை சந்திப்பு வழியாக கோயிலை வந்தடைந்தனர்.அதனைத...

ஃபெஞ்சல் புயலால் உடைந்த பாலத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்து தரவேண்டும் கிராம மக்கள் கோரிக்கை..!

Image
 தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலூர் மற்றும் கல்லாத்துக்காடு மற்றும் இந்திரா நகர், புரட்சி நகர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது.  இதில் கல்லாத்துக்காடு கிராமம் அருகில் உள்ள ஊர்கள் மற்றும் நகர பகுதிக்கு செல்லும் சாலையில் பாலம் சாமி பாறை ஆற்றின் குறுக்கே சாலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் பாலம் உடைந்து விட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லவும் விவசாய மக்களுக்கும் பொதுமக்களுக்கும். நகர் பகுதிக்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். எனவே அ.பள்ளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேஜஸ் அகாடமியில் படித்து அரசு பணி செல்வோருக்கு பாராட்டு விழா..!

Image
தேஜஸ் அகாடமியில் படித்து அரசு பணி செல்வோருக்கு "பாராட்டு விழா" தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள  தேஜஸ் அகாடமியில் படித்து தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் நிலை காவலராக  தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லும் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக  தேஜஸ் அகாடமியின் நிறுவனர் M.கண்ணையன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டி, சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:- 2021-ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் TNPSC,TET, DEFENCE, POLICE உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் தேர்ச்சி பெற்று பணிக்கு செல்கின்றனர்.  கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக எனது பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய கால கட்டத்தில்  அரசு பணி என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது. அதனை எளிமையாக்கவே இந்த பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். இம்மையத்தின் மூலம் இன்னு...