Posts

Image
 தருமபுரி கிழக்கு மாவட்ட  திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்  ஆலோசனைக் கூட்டம்..!   தருமபுரி கிழக்கு மாவட்ட  அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MGS வெங்கடேஸ்வரன்  வரவேற்றார். தருமபுரி கிழக்கு மாவட்ட  பொறுப்பாளர்  ஆ.மணி M P வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடர்பாக சிறப்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கே.ஆர்.சி செல்வராஜ்,பெ.ராஜகோபால், N.S.கலைச்செல்வன், D. கார்த்திக்,R.P.முத்தமிழன், G.அசோக்குமார்,தீ.கோடீஸ்வரன், தங்கச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள்  தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA,   P.தர்மச்செல்வன் மற்றும் தருமபுரி தொகுதி பார்வையாளர், டி.செங்குட்டுவன் Ex MLA, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட...

தருமபுரி மேற்கு நகர கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

Image
 தருமபுரி மேற்கு நகர கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..! தருமபுரி மேற்கு நகர கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மேற்கு நகர பொறுப்பாளர் M.P.கௌதம் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு நகர கழக பொறுப்பாளர் நாட்டான் மாது முன்னிலை வகித்தார். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ.மணி MP,  கலந்து கொண்டு  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்படுவதை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, தருமபுரி மேற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அழகுவேல்,சம்மந்தம் MC, D.G.வடிவேல் , சௌந்தர்ராஜன் MC, பாஸ்கர், வெங்கடாஜலபதி, சாந்தரூபிணி மற்றும்நகரப் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட ,நகர சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள்,BLA2,BDA,BLC நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஜெகன் MC மேற்கு நகர பொறுப்பு குழு உறுப்பினர் நன்றி கூறினார்.

தருமபுரியில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா..!

Image
 தருமபுரியில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா..! தருமபுரி கடைவீதி, குமாரசாமிபேட்டை, அன்னசாகரம் ஆகிய பகுதியில் உள்ள முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து தருமபுரி கடை வீதியில் உள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருத வானேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 22- ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான (27/10/2025) திங்கட்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூர பத்மநாபன் புறப்பாடு நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை முருகப்பெருமாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகர பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை (28/10/2025) காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது . இதை தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் ம...

தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

Image
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக மாநிலம் தழுவிய மற்றும் மாவட்ட அளவிலான ஒரு நாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.  மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் ரூபாய் 15,000 வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊராட்சி மூலம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்க ...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உண்மையான ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டம்..!

Image
 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உண்மையான ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மோசடியாக பணி நிரந்தரம் செய்ததை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போராட்ட குழுவினர்கள் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி குழுவின் பரிந்துரையின்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் மோசடியாக பணி நிரந்தரம் செய்ததனால் பாதிக்கப்பட்ட உண்மையான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை போராட்டக் குழுவினர் நடத்தினர். உண்ணாவிரத போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.  போராட்டத்தில் காலி கமிஷன் காலத்தில் உண்மையாக உழைத்த ஒப்பந்த தொழிலாளர்களை உரிய கள விசாரணை செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வாரிய பணி வழங்க வேண்டும், மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை விசாரணை செய்து அடையாளம் கண்டு அவர்களுக்கு வாரியம் வழங்கிய பணப்பலன்களை திரும்ப பெற்று வாரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த...

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

Image
 பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..! தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளம் பட்டி சாலையில் உள்ள மந்தைவெளி மைதானத்தில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி பள்ளி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழுது அடைந்ததால் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது அங்கன்வாடி மையத்தின் பிரிந்த நிலையில் உள்ள கட்டிடம் அருகே பாலக்கோடு பேரூராட்சி மூலம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தற்போது முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடம் புதிதாக கட்ட முடியாத நிலையில் அதனை ஆக்கிரமித்தும் கட்டுகிறார்கள். ஆகையால் உடனே இந்த பணிகளை நிறுத்தி பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து அங்கன்வாடி மற்றும் சுற்றிலும் பூங்கா அமைத்து அங்கன்வாடி பள்ளி அங்கேயே நடைபெற நடவடிக்கை எடுப்பதுடன் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என  பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசின் நல திட்ட பிரிவின் மாவட்ட துணை தலைவர் சிவா, நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு நகர தலைவர் சேகர், நகர பொறுப்பாளர் ...

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்..!

 தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்..! தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில்நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்றார். தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், கண்ணபெருமாள், பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், ஆனந்தன்  உட்பட பலர்  முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு SiR திருத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கி பேசினார்.  இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசும்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியும் வெற்றி பெற செய்ய வேண்டும், இதில் குறிப்பாக பாலக்கோடு தொகுதி தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக  தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அதை முறியடித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்கு கட்சி ...

நூலஅள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..!

Image
 நூலஅள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..! தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட நூலஅள்ளி மற்றும் நல்லசேன அள்ளி ஊராட்சிகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நூலஅள்ளி மண்டுவில் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை ஆகிய சேவைகளை வேண்டி பொதுமக்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ முகாமில் பொதுமக்கள் பிபி, சக்கரை நோய் இதர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் மாதையன், சக்திவேல், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

Image
 தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..! தருமபுரி நகர அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் சிலை அருகில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, விவசாய அணி தலைவர் அன்பழகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் டி. கே. ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் ஆர். பாலு, கழக ஆட்சி மன்ற தலைவர் ஆர்.ஆர்.முருகன், நகரச் செயலாளர் என். பார்த்திபன், முத்துசாமி, சங்கீதா, பழனிசாமி, கணேசன், காளி, வேலாயுதம், ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குமாரசாமி பேட்டையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் பதிவு..!

Image
 குமாரசாமி பேட்டையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் பதிவு..!   தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நகரில் உள்ள 8,9,10 ஆகிய வார்டுகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை திட்டத்திற்கு ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.  மேலும் இ சேவை மையத்தின் சார்பில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக மனுக்களை பொதுமக்கள் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் பி.பி, சர்க்கரை நோய், ரத்தம் போன்ற உடலில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என பரிசோதனை செய்து கொண்டனர்.  இம்முகாமில் ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எ.மாதேஸ்வரன் முகாமினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இந்த முகாமில் நகர மன்ற தலைவர் லட்சுமி, ஆணையர் சேகர், டி.எ.குமார், சூர்யா, ரவி, சாந்தி ரூபி மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா..!

Image
இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா..! தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா பாரதிபுரம் ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் இருந்து பொதுமக்கள் பூ கரகம், கூழ் எடுத்துக்கொண்டு  ஊர்வலமாக ஜெகநாதன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஸ்கூல் தெரு ஆகிய பகுதியில் இருந்து  பக்தர்கள்  வந்து ஸ்ரீ சாலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கூழ் ஊற்றுதல் விழா நடைபெற்றது. இதில் இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றம் , இலக்கியம்பட்டி  இளைஞர்கள்  பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ கருப்புசாமி கோவிலில் 108 கிலோ மிளகாய் கரைசலை பூசாரி மீது ஊற்றி பக்தர்கள் அபிஷேகம்..!

Image
 ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ கருப்புசாமி கோவிலில் 108 கிலோ மிளகாய் கரைசலை பூசாரி மீது ஊற்றி பக்தர்கள் அபிஷேகம்..! தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி கோயில் உள்ளது, ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று இந்தக் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம், இதைதொடர்ந்து இந்த ஆண்டும் ஆடி அமாவாசை 11 ஆம் ஆண்டை முன்னிட்டு ஸ்ரீ கருப்புசாமி கோயிலில் வினோதமான அபிஷேகங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலின் பூசாரியான கோவிந்தன் என்பவர் அருள் வந்து ஆடியபடியே, நீளமான அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்குக் கூறினார். இதையடுத்து பக்தர்கள், கோவிந்தன் மீது 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதன் பிறகு அவருக்குப் பால் அபிஷேகமும் செய்தனர். மேலும், மதுபானங்களையும் விதவிதமான சுருட்டுகளையும் வைத்துப் படைத்தனர். அபிஷேகங்கள் முடிந்த பிறகு, பூசாரி கோவிந்தன் பக்தர்களின் குடும்பப் பிரச்சனைகள் அகலவும், தீய சக்திகள் விலகவும், வியாபாரம், கடன் பிரச்சனைகள் தீரவும் அருள்வாக்குக் கூறினார்.  கோயிலில் பக்தர்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டு நேர்...

தருமபுரியில் நீருக்கடியில்கடல் மீன் கண்காட்சி தொடக்கம்..!

Image
 தருமபுரியில் நீருக்கடியில்கடல் மீன் கண்காட்சி தொடக்கம்..! தருமபுரி சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வள்ளலார் திடலில் வண்ண மீன்களுடன் கூடிய கடல் மீன் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கண்காட்சி இன்று முதல் தொடங்கியது. இக்கண்காட்சியை நகராட்சி துணைத் தலைவர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் . இதுகுறித்து கண்காட்சி க அமைப்பாளர்கள் டி.ஜே. அம்யூஸ்மெண்ட் மேலாண் இயக்குனர் தினேஷ் மற்றும் மேலாளர் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது:- இக்கண்காட்சியானது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இன்று முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தத்துரூபமாக கடலுக்கு அடியில் சென்று பல விதமான வண்ண மீன்களை காணலாம். மேலும், பொழுதுபோக்குக் காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ராட்டினம், கொலம்பஸ் பிரேக் டான்ஸ், டிராகன்டி ரெயின், மினி ட்ரெயின், உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்ட...

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

Image
 கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது; தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தன அள்ளி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரக செல்லியம்மன் கோவில் நிலம் 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் இந்த கோவில் அறங்காவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலம் ஏலம் விட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஏலத்தை சேலம் இணை ஆணையர் பொது ஏலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏலம் விடாமல் இந்த கோவில் அறங்காவலர் குழுவினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலத்தை ஏலம் விடாததால் கரக செல்லியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கோவில் நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்...

ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இலக்கியம்பட்டி ஶ்ரீ சாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சி..!

Image
 ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இலக்கியம்பட்டி  ஶ்ரீ சாலை  மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சி..! தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஸ்ரீசாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு சாமிக்கு  தேன், பால், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இலக்கியம்பட்டி,செந்தில் நகர், அழகாபுரி,அண்ணா நகர், கொட்டாய், கலெக்டரேட் ஆகிய பகுதியில் மேளதாளம்  முழங்க சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா வரும்பொழுது வழிநெடுங்க பக்தர்கள் சாமியை வழிபாடு செய்தனர். இதில் ஊர் நிர்வாகிகள் பழனிச்சாமி, சாமிநாதன், காளியப்பன், பழனிச்சாமி, கோவிந்தராஜ், சிவா,தயாநிதி, கௌதம், ராம்குமார், இலக்கியம்பட்டி M வெங்கடேஷ் , அருண்குமார், சந்தோஷ், கோவில் பூசாரி மாது, ஊர் பொதுமக்கள், இலக்கியம்பட்டி இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய எம்எல்ஏ..!

Image
 கொமத்தம்பட்டியில் அரசு பள்ளியில் பாகுபாடின்றி மாணவர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய எம்எல்ஏ..! தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கொமத்தம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாகவும் சுத்தமாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கண்ட பின்னர் பள்ளி மாணவர்களுடன் அவரும் தரையில் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட்டார். அப்பொழுது மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய தருமபுரி சட்டமன்ற உறுப்பினரை பார்த்து மாணவர்கள் சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பாஜகவினர் காமராஜர் பிறந்த நாளை இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!

Image
 பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாஜக சார்பில்  முன்னாள் முதல்வர்  கர்மவீரர் காமராஜர்  123 -வது பிறந்தநாள் விழா  கொண்டாட்டம்..! தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாஜக சார்பில்  முன்னாள் முதல்வர்  கர்மவீரர் காமராஜர்  123 -வது பிறந்தநாள் விழா  மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில்  நடைப்பெற்றது. நகர தலைவர் கணேசன், நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் சின்னவன், நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர செயலாளர்கள்  நந்தகிரி, ராஜாராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு உள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா மாலை அணிவித்து, மலர்தூவி  மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் அழகுபெருமாள், சண்முகம், மாதேஷ், ராமர்,சரவணன...

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!

Image
 பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமை தாங்கினார். இதில் ஷோரூம் உரிமையாளர் ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்கள் கேசவராஜ், விமல்ராஜ், சக்திதரன், மங்களகணபதி முருகேசன், ராஜாமணிசரவணன், நகை கடைசங்க தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புதிய மொபைல் ஷோரூமை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வணிகர் சங்க தலைவர் முத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், அன்புமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், பாஜக நகர் மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேளாவள்ளி சேகர், கணபதி, சின்னவன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன்,  தொழிலதிபர்கள் தண்டாயுதபாணி, சிவாஜி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ...

பையர்நத்தம் ஊர் பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

Image
 தருமபுரி மாவட்டம், பையர் நத்தம் கிராமத்தில் ஊர் பொதுமக்களால் சேர்ந்து காளியம்மன் கோவில் ஊர் திருவிழா நடத்தப்பட்டது திருவிழாவுக்கு தலைமையேற்று சிறப்பு அழைப்பாளராக  டாக்டர்.ஆர்.ஜே.பி. ஜான்சன் பாபு   முன்னாள் ஒன்றிய சுயேச்சை கவுன்சிலர்  மற்றும் தொழிலதிபர் அவர்களை அவர் இல்லத்தில் இருந்து ஊர் தலைவர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ஊர் பொதுமக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் பையர் நத்தம் ஊர்  பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும்  50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் தொழிலதிபர் ஜான்சன் பாபு அவர்களால் இலவசமாக   ஏழை எளியோர்களுக்கு வழங்கினார்.  ஜான்சன் பாபு அவர்கள் இது போன்ற ஒவ்வொரு வருடமும் பையர் நத்தம்  ஊர் பகுதி மக்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கி மற்றும் அப்பா அம்மா இல்லாத ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று பல மாணவர் மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்  என்பது குறிப்பிடத்த...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..!

Image
 தருமபுரி மாவட்டம்,  நாயக்கன்கொட்டாயில்  மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நாயக்கன்கொட்டாயில் மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் வழியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆர். ஜே. பி. ஜான்சன் பாபு முன்னாள் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் மீது பற்று கொண்டவர் பல பகுதிகளும்  மாவட்டத்திலும் அம்பேத்கர் சிலையை நிறுவியவர் அம்பேத்கர் வரலாற்றையும் ஜெய் பீம்  என்ற   வாக்கியத்தை விரிவாக எடுத்துரைத்து  பேசினார். இலவச மருத்துவ முகாமை  தொடங்கி வைத்தார் . தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சுரேஷ்  மற்றும் அதியமான் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் கிரிக்கெட் வாலிபால் புட்  பால் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சுரேஷ்  வழக்கறிஞர் பாலகிருஷ்ணன். பிரபாகரன். பவுண்டேஷன் அமைப்பு நிர்வாகிகள் மு சண்முகம...