கொங்கநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!
அரூரில் கொங்கநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தருமபுரி கிழக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் கலந்து கொண்டு பேசுகையில் தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கிராமங்களில் பூத் கமிட்டி அமைப்பது கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன், மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், ஐடிவிங் கோகுல், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் முகிலன், ஒன்றிய தலைவர் இளையராஜா, நகர தலைவர் அசோகன் மற்றும் ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment