தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு..!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு..!
தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அரூர் கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு தியாகிகள் நடராசன் தாளமுத்து உறுவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி, தொகுதி துணை செயலாளர்கள் கேசவன் கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் தீரன் தீர்த்தகிரி, சோலைஆனந்தன், கலையரசன், சக்திவேல், சாந்தலிங்கம், ராஜசேகர், கோபி, அரூர் பாஷா, காவேரி, மகளிரணி ஞானச்சுடர், சிந்தைமா, தமிழன், ராமலிங்கம், சிறுத்தை, வேலு, சக்திதாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment